வெள்ளியணையில் அக்.23-இல் மின் தடை

வெள்ளியணை, ஒத்தக்கடை, மண்மங்கலம் உளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (அக். 23) ஆம் தேதி மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளதாக


வெள்ளியணை, ஒத்தக்கடை, மண்மங்கலம் உளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (அக். 23) ஆம் தேதி மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளதாக கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் செந்தாமரை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட வெள்ளியணை, ஒத்தக்கடை, பாலம்மாள்புரம், மண்மங்கலம் மற்றும் காணியாளம்பட்டி ஆகிய துணை மின்
நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (அக். 23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரபட்டி, முஷ்டகிணத்துப்பட்டி ஆகிய பகுதிகள் மற்றும் வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், மண் மங்கலம், என்.புதூர், கடம்பங்குறிச்சி, வள்ளியப்பம்பாளையம், வடுகபட்டி,ஒத்தக்கடை, சோமூர், செல்லிபாளையம், நெரூர்,திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரிய, சின்னகாளிபாளையம் மற்றும்
பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்துரோடு, கருப்பாயிகோயில் தெரு, கச்சேரிபிள்ளையார்
கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட், வீரியபட்டி, காணியாளம்பட்டி, சோனம்பட்டி, துளசிக்கொடும்பு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com