அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண் பெறும் காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் வெங்கமேடு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பி.திருப்பதி என்பவரது மகன் டி. மணிகண்டன் என்பவருக்கு நான்காம் தவணையாக ரூ.25,000 கல்வி உதவித்தொகையை சனிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் வழங்கினார். நிகழ்ச்சியில், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.