கரூரில் கண்தான விழிப்புணர்வுப் பேரணி

கரூரில் கண்தானத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

கரூரில் கண்தானத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
கரூர் லயன்ஸ் சங்கங்கள், அரசு கலைக் கல்லூரி லியோ சங்கம் சார்பில் கண்தான விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. நாரதகான சபா முன்பு துவங்கிய பேரணியை  லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.கே.சேது சுப்ரமணியன் தொடக்கி வைத்தார். வட்டாரத் தலைவர்கள் செந்தில்குமார், சண்முகம், பிளாட்டினம் கணேசன், பி. கார்த்திகேயன் , பி.என்.அனந்தநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்கங்களின் மண்டலத் தலைவர் மேலை.பழனியப்பன் கண்தானம் குறித்து பேசினார். அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் கண்தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர். 
உழவர்சந்தை, லைட்ஹவுஸ் கார்னர், பழைய திண்டுக்கல் சாலை, ஜவஹர் பஜார் வழியாகச் சென்ற பேரணி நகரத்தார் மண்டபத்தை அடைந்தது. இதில், பல்வேறு லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com