வேலாயுதம்பாளையம் அருகே மொபட் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், கீழ்ஒரத்தை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(75). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மொபட்டில் கரூர்- சேலம் புறவழிச்சாலையில் சாலையில் அய்யம்பாளையம் பிரிவு பகுதியில் சென்றார். அப்போது எதிரே வந்த கார், மொபட் மீது மோதியதில் பலத்த காயமடைந்த முத்துசாமி நிகழ்விடத்தில் இறந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.