கரூரைச் சேர்ந்த ஜோதிமணி ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். தற்போது அவரை தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் மூன்று நபர் குழுவில் உறுப்பினராக கட்சியின் தலைவர் ராகுல்காந்தி நியமித்துள்ளார். ஜோதிமணிக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.