அண்ணா பிறந்த நாள்: அதிமுக, திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணா 110ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர்


பேரறிஞர் அண்ணா 110ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூர் வெங்கமேட்டில் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கீதாமணிவண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் பசுவை சிவசாமி, நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன், ஜெ.பேரவை செயலாளர் காமராஜ், க.பரமத்தி ஒன்றியச் செயலாளர் பி.மார்கண்டேயன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.செல்வராஜ், தாந்தோணி குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திமுக நகரச் செயலாளர்கள் எஸ்.பி.கனகராஜ், கணேஷ், ஒன்றியச் செயலாளர்கள் கந்தசாமி, கருணாநிதி உள்பட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
அதேபோல, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் அமமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.பி.லோகநாதன் தலைமை வகித்தார்.
எம்ஜிஆர் மன்ற செயலாளர் பி.சுப்ரமணி, துணைச் செயலாளர் ஆர்.எம்.தியாகராஜன், ஜெ. பேரவைத் தலைவர் தாரணி பி.சரவணன், ஒன்றியச் செயலாளர் என்.மணிகண்டன், பேரூராட்சி செயலாளர் ஏ.செந்தில்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com