கரூரில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ரூசோ வரவேற்றார். பகுதிநேர சிறப்பாசிரியர்களின் குறைகளை கேட்டறிதல், 2011முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை அரசு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறப்பாசிரியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.