கரூரில் மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் தெற்கு காந்திகிராமம் அண்ணா நகரைச் சேர்ந்த பாண்டியராஜ் மகன் குருநாதன்(22). இவர் துபையில் எம்பிபிஎஸ் நான்காமாண்டு படித்து வந்தார். ஒரு வாரத்திற்கு முன் விடுமுறைக்கு ஊருக்கு வந்த குருநாதன் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து காண்டார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.