வாய்க்காலில் தவறி விழுந்த முதியவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
கரூரை அடுத்த வடக்கு நெரூரைச் சேர்ந்த விவசாயி பாண்டியன்(65). வெள்ளிக்கிழமை இரவு வயலுக்கு தண்ணீர்பாய்ச்ச சென்ற இவர், அங்குள்ள வாடி வாய்க்காலில் தடுமாறி விழுந்ததில் நீரில் மூழ்கி இறந்தார்.
இதுகுறித்து வாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.