பணி மாறுதல் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள்

பெரம்பலூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆன் - லைன் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில், பணி மாறுதல் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி.

பெரம்பலூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆன் - லைன் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில், பணி மாறுதல் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி.

பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்ற மேலப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். பாலு, எசனை பள்ளிக்கும், வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். சுந்தரராஜூ பெரம்பலூர் பள்ளிக்கும், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ. சங்கர் மேலப்புலியூர் பள்ளிக்கும், கீழப்புலியூர் அரசு மேலைநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பி. நாகமணி செட்டிகுளம் பள்ளிக்கும், நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி. மலர்கொடி வெங்கலம் பள்ளிக்கும் என, 5 தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணி மாறுதல் பெற்றனர்.

கூத்தூர் அரசு மேலைநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ. லூயிமேரி ஸ்டெல்லா, திருச்சி மாவட்டம். கல்லகம் பள்ளிக்கும், பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம். ராஜன் திருச்சி மாவட்டம், தும்பலம் பள்ளிக்கும் என 2 நபர்கள் மாவட்டம் விட்டு, மாவட்டம் பொது மாறுதல் பெற்றனர்.

பணி மாறுதல் பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி. மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com