ஏப்ரல் 26 முதல் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் ஏப். 26 முதல் மே 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் ஏப். 26 முதல் மே 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாமில் 18 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சி முகாமில் கால்பந்து, கையுந்துப்பந்து, கபடி, தடகளம், கைப்பந்து, டேக்வாண்டோ, சிலம்பம், கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நாள்தோறும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படும். இந்த முகாமில் பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 82209 99499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்பிரமணியராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com