பெரம்பலூரில் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில், செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் அ. நடராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில், செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் அ. நடராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நகரச் செயலர் எம். பிரபாகரன், ஒன்றிய செயலர்கள் அண்ணாதுரை, என். கிருஷ்ணமூர்த்தி, மதியழகன், நல்லதம்பி, ராஜேந்திரன், ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன், மாநில நிர்வாகி பா. துரைசாமி, மாவட்ட நிர்வாகிகள் எம். ராஜ்குமார், ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கி. முகுந்தன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், ஏப். 25ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம், கருணாநிதி, ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் முழு கடையடைப்பு போராட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து போராட்டத்தை வெற்றி பெற செய்யவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட அணி செயலர்கள் வழக்குரைஞர் செந்தில்நாதன், நிர்வாகிகள் முருகேசன், ஹரிபாஸ்கர், மகாதேவி ஜெயபால், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், அப்துல்பாரூக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com