டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மே தினத்தை முன்னிட்டு, மதுபானக் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களுக்கு திங்கள்கிழமை (மே 1) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மே தினத்தை முன்னிட்டு, மதுபானக் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களுக்கு திங்கள்கிழமை (மே 1) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் தனித்தனியாக வெளியிட்ட செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் உள்ளிட்ட கடைகளுக்கு மே தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. விடுமுறை நாளில் மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com