கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி சாவு

பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகேயுள்ள புதுவிராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் மாலதி (16). இவர், நக்கசேலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை வயலுக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். 
அப்போது, அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கிய மாணவி மாலதி உயிரிழந்தார்.  
தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்புப் படையினர், சம்பவ இடத்துக்குச் சென்று மாலதி உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com