பெரம்பலூரில், அம்பேத்கரின் 61 -வது நினைவு நாளை முன்னிட்டு, புதன்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், மாநிலச் செயலர் வழக்குரைஞர் பி. காமராஜ் தலைமையில், மாவட்ட பொறுப்பாளர்கள் அ. வினோத்,
பிரபாகரன், வைரச்செல்வன், கெளதமன் லேகா, மாணவரணி பொறுப்பாளர்கள் சாக்கிய பிரியா, கோகுல், மகளிரணி நிர்வாகிகள் லெட்சுமி, மேனிஷா ஆகியோர் மாலை அணித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் சி. தமிழ்மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் என். செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச்
செயலர் வீ. ஞானசேகரன், மதிமுக மாவட்டச் செயலர் செ. துரைராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
திமுக சார்பில் பொதுக் குழு உறுப்பினர் கி. முகுந்தன் தலைமையில், இளைஞரணி நிர்வாகிகள் யுவராஜ், வார்டு செயலர் கனகராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத் தலைவர் ஆ. ராமர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் த.
லோகநாதன், மாவட்ட அமைப்பாளர் மா. அண்ணாதுரை, மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், மாவட்டச் செயலர் ப. மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.