பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்களூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆ. கிருஷ்ணமூர்த்தி (53), விவசாயி. இவர் செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில்
திருமாந்துறை பிரிவுச் சாலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். புகாரின்பேரில், மங்கலமேடு போலீஸார் வழக்குப் பதிந்து,
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முத்தையா மகன் சுரேஷை (28) கைது செய்து விசாரிக்கின்றனர்.