பெரம்பலூர் உடற்கல்வி  ஆசிரியர்களுக்கு யோகா

பெரம்பலூர் மனவளக்கலை மன்றம் சார்பில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் அரசு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு  யோக பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மனவளக்கலை மன்றம் சார்பில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் அரசு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு  யோக பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
மாவட்ட விளையாட்டு அரங்கில் 2 நாள் நடைபெற்ற பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி தொடக்கி வைத்தார். 
மனவளக்கலை மன்றத்தின் யோகா பேராசிரியர்கள் சுந்தர், நிஷா, ஆசிரியர் கீதா ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஆசிரியரிடமிருந்து மாணவ, மாணவிகள் யோக பயிற்சி பயின்று பயனடைய வேண்டும் என்னும் நோக்கத்துக்காக அளிக்கப்பட்ட பயிற்சியில் 83 அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com