மனித உரிமைகள்  தின உறுதி ஏற்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது
மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில், உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 
இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் விஜயலட்சுமி (நிலம்), சேதுராமன் (பொது), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.                       
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com