பெரம்பலூரில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்டக் கிளை ஆலோசனைக் கூட்டம், மாவட்டத் தலைவர் அங்கமுத்து தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட இணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலர் மருதமுத்து, சங்க ஆலோசகர் இருதயசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் செல்லப்பரெட்டி, சின்னம்மாள், கந்தசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.
கூட்டத்தில், புதிய ஊதிய விகிதத்தில் ஓய்வூதியம் உயர்ந்துள்ளதால், வருமான வரி உச்ச வரம்பை உயர்த்தி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசைப் போல கடந்த 1.1.2016 முதல் ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வேப்பூர் வட்டத் தலைவர் செங்கான், வேப்பந்தட்டை வட்டச் செயலர் சையத்பாட்ஷா ஜான், ஆலத்தூர் வட்டார பொருளாளர் செங்கமலை, செய்தித் தொடர்பாளர் தேவகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ஆதிசிவம் வரவேற்றார். மணிவேல் நன்றி கூறினார்.