jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்

மோட்டார் வாகன மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தல்

By DIN  |   Published on : 17th July 2017 09:42 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

மத்திய அரசின் மோட்டார் வாகன மசோதாவை திரும்ப பெற வேண்டுமென,  வாகன ஓட்டுநர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், 3 பிளஸ் 1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் சங்க பேரவைக் கூட்டம், மாவட்டத் தலைவர் பி. பிரகாஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட செயலர் எ. ரெங்கநாதன் செயல் அறிக்கையும், பொருளாளர் சி. கனகராஜ் வரவு, செலவு அறிக்கையும் வாசித்தனர்.
கூட்டத்தில்,  பெரம்பலூர் மாவட்டத்தில் வீடு இல்லாத ஆட்டோ ஓட்டும் தொழிலாளிகளுக்கு மத்திய, மாநில அரசு அறிவித்த நிதியுதவியில் இருந்து இடம் வழங்கி, வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு கட்டித்தர வேண்டும். எளம்பலூர் ஊராட்சிக்குள்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் சாலை வசதி, கழிப்பிட வசதி, பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்க  ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்குள்ள அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருநகர் பகுதியில் 40- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆட்டோ நிறுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில்,  தற்போது அந்த இடத்தை ஆக்கிரமித்து வணிக வளாகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி ஆட்டோ நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சி.ஐ.டி.யு பொறுப்பாளர்கள் ஆர். சிற்றம்பலம், ஆர்.  அழகர்சாமி,  பி.  துரைசாமி,  ஆர். ராஜகுமாரன், எ. கணேசன், பி. ரெங்கராஜ், எஸ். அகஸ்டின், பி. முத்துசாமி, கே. மணிமேகலை, எம். செல்லதுரை, கல்யாணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநிலக்குழு உறுப்பினர் சி. சண்முகம் நன்றி கூறினார்.

 

 

O
P
E
N

புகைப்படங்கள்

மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து
ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்

வீடியோக்கள்

தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
ஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்
இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்