பெரம்பலூரில் திங்கள்கிழமை மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் ஒன்றியத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை (ஜூலை 17) நடைபெற உள்ளது.
தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் ஊனம் தெரியும் வகையில் 6 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் பங்கேற்கலாம்.