பெரம்பலூரில் ஜூன் 23-ல் விவசாயிகள்  குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 23 ஆம் தேதி காலை 10 மணியளவில், ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 23 ஆம் தேதி காலை 10 மணியளவில், ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்பாசனம், கடனுதவிகள், வேளாண்மை இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும். எனவே, இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் வே. சாந்தா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com