அரியலூர், பெரம்பலூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர், பெரம்பலூரில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர், பெரம்பலூரில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுமுறை நாள்களில் அரசு விழா நடத்துவது மற்றும் ஆய்வு மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். துணை வட்டாட்சியர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கய்ர நியமித்திட வேண்டும். மாவட்டந்தோறும் துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும்.
தேர்தல் நடைபெறும் காலம் தவிர்த்து மற்ற காலங்களில் தேர்தல் அலுவலர்களை பணி மாறுதல் செய்யும் அதிகாரத்தை ஆட்சியருக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூரில்....அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் பானுப்பிரியா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூரில்.... மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் மகாராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் பாரதிவளவன், மாவட்ட துணை தலைவர் சரவணன், மத்திய செயற்குழு உறுப்பினர் குமரி ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com