இளையோர் செஞ்சிலுவை சங்க துணைக்குழு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட இளையோர் செஞ்சிலுவை சங்க துணைக்குழு கூட்டம், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் வெ. பிருத்விராசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட இளையோர் செஞ்சிலுவை சங்க துணைக்குழு கூட்டம், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் வெ. பிருத்விராசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் ரெ. சுந்தரராசு, இந்தியன் செஞ்சிலுவை சங்க மாவட்ட கெளரவ செயலர் என். ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் சி. ராமதாஸ், கே. தேத்தரவு ஸ்டெல்லா, சி. ரெஜினா மேரி, சு. லதா, பெ. இளங்கோவன், பெ. ஜோதிலட்சுமி, த. ஜீவரத்தினம் ஆகியோர் பேசினர்.  
மாவட்ட கன்வீனர் வெ. ராதாகிருஷ்ணன், 2016- 17 ஆம் கல்வியாண்டின் வரவு, செலவு அறிக்கை சமர்ப்பித்து, நிகழாண்டுக்கான செயல் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில், ஜூலை 12-இல் முதல்பருவ கவுன்சிலர்கள் கூட்டம் நடத்துவது. ஆகஸ்டு 2-ஆவது வாரம் ஜெனிவா தினம் கொண்டாடுவது. ஆகஸ்டு 18, 19, 20 ஆகிய தேதிகளில் ஜூனியர்களுக்கான பயிற்சி முகாம் நடத்துவது. செப்டம்பரில் உலக கை கழுவும் தினம் கொண்டாடுவது.
அக். 14-இல் ஜூனியர்களுக்கான 1 நாள் கல்வி சுற்றுலா நடத்துவது. அக். 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வது. டிச. 1-இல் உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடுவது. ஜன. 3-இல் சிறந்த ஜூனியர்களுக்கான தேர்வு நடத்துவது. 31-இல் முப்பெரும் விழா நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மண்டல அலுவலர்கள் ஆர். ராசமாணிக்கம், கே. கிருஷ்ணராஜ், எம். ஜோதிவேல், எம். நவிராஜ், வெ. ராஜா, எம். தன்ராஜ், எ.எஸ். ராசேந்திரன், ஆர். செல்வகுமார் மற்றும் 26 பள்ளிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com