மழை வேண்டி பெரம்பலூர் மதனகோபாலசாமி கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் நகர அதிமுக சார்பில் நடத்தப்பட்ட இந்த யாகத்தில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் வருண ஜபம் ஹோமம், ஸ்ரீ ருத்ராபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் அ. அருணாசலம், மாவட்ட செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா. சந்திரகாசி, நகரச் செயலர் ஆர். ராஜபூபதி, ஒன்றியச் செயலர்கள் என்.கே. கர்ணன், சிவப்பிரகாசம், ப. கிருஷ்ணசாமி, மாவட்ட அணி செயலர் எம். வீரபாண்டியன், குரும்பலர் பேரூர் செயலர் வி. செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.