அரசின் அடையாள அட்டை பெற ஓய்வூதியதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்ட சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அரசின் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர் மாவட்ட சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அரசின் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.
ஓய்வூதியதாரர்கள் ‌w‌w‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​ என் இணை யதளத்தில், கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, நேர்காணலுக்கு கருவூலத்துக்கு வரும்போது அளிக்க வேண்டும். ஏற்கெனவே நேர்காணல் முடித்தோர், அதற்கான படிவத்தை சம்பந்தப்பட்ட கருவூலத்தில் நேரில் அல்லது, அஞ்சல் மூலமாகவோ, தனிநபர் மூலமாகவோ அளிக்க வேண்டும்.   விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு இணையதளத்தில் அரசாணையுடன் பதவிறக்கலாம். அல்லது, பெரம்பலூர் மாவட்ட அனைத்து சார் கருவூலங்கள் மற்றும் மாவட்ட கருவூலத்தில் பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட கருவூல அலுவலர் சீனிவாசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதைத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com