தலைமை ஆசிரியர் 5 பேருக்கு பணி மாறுதல்

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மூலம் 5 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மூலம் 5 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றனர்.
2017- 2018 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.   பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வில், நெற்குணம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வகுமார், அனுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், காரை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ந. சுசீலா, வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், கூத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ். பிரபாகரன், காரை அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் எம். மகாலட்சுமி லப்பைக்குடிக்காடு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், பசும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரம், கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் பணி மாறுதல் பெற்றனர்.
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் மூலம் துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்லமுத்து, திருச்சி மாவட்டம், சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றார். முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து, அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சனிக்கிழமை (மே 20) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com