பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள ஏ.வி.ஆர் நகரை சேர்ந்தவர் ஜெயராமன் மகள் சுஜித் ப்ரியா (14). இவர், பெரம்பலூர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்ப வரவில்லையாம். இதையறிந்த அவரது பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லையாம். இதையடுத்து, பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஜெயராமன் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.