பெரம்பலூரில் மே 30இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் ஆட்சியரக கூட்ட அரங்கில், எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மே 30 ஆம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.

பெரம்பலூர் ஆட்சியரக கூட்ட அரங்கில், எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மே 30 ஆம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எரிவாயு உருளைகளை மறுநிரப்பி வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர் பதிவுசெய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனபோக்கு தொடர்பாக பெறப்படும் புகார்களை பெற்று, உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்குள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மே 30 ஆம் தேதி காலை 11 மணியளவில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர், எரிவாயு சம்பந்தமான குறைகள் இருந்தால், இக் கூட்டத்தில் தெரிவிக்கலாம். மேலும், எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் களைவது தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com