பெரம்பலூர்
மின் வேலியில் சிக்கி விவசாயி சாவு
வேப்பந்தட்டை அருகே வன விலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி விவசாயி ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
வேப்பந்தட்டை அருகே வன விலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி விவசாயி ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அய்யனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (46). விவசாயி. இவர், வியாழக்கிழமை காலை அவரது வயலுக்கு சென்றார். அப்போது, பாலைய்யா என்பவரது வயலை கடந்து செல்ல முயன்றபோது வன விலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பழனிசாமி உயிரிழந்தார். இதையறிந்த, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அளித்த தகவலைத் தொடர்ந்து, கை.களத்தூர் போலீஸார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸார் பாலைய்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.