நவம்பர் 14-இல் மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம்

பெரம்பலூர், நவ. 10: பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.


பெரம்பலூர், நவ. 10: பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் சி. தேவராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மின் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் மின்சாரம் தொடர்பான தங்களது குறைகளைத் தெரிவிக்கும் வகையில், குறைகேட்பு நாள் கூட்டம் பெரம்பலூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நவ. 14 ஆம் தேதி நடைபெறுகிறது.
முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் அவர் அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com