உணவு முறை விழிப்புணர்வு கருத்தரங்கு

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் ஆரோக்கியமான

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் ஆரோக்கியமான வாழ்விற்கான உணவு முறைகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே. மனோகரன் தலைமை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தின் இயக்குநர் முனைவர் இரா. மாலதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் முனைவர் ஆர். விஜயக்குமார், ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையான உணவு முறைகள் குறித்து விளக்கி பேசினார். இக்கருத்தரங்கில் பல்வேறு துறையை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com