கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரைக்கான பள்ளி படிப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மேற்படிப்பு பயிலும் கிறிஸ்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்ஸி மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 2017- 18 ஆம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 10 ஆம் வகுப்பு வரைக்கான பள்ளி படிப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கான புதியது,  புதுப்பித்தல் மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் ஆன்லைனில் ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ர்ஸ்.ண்ய்  விண்ணப்பிக்க அக். 31 வரையிலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என, மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com