பெரம்பலூரில் முதியவர் மர்மச் சாவு

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ந. சுப்பையா (60). இவர், கடந்த சில மாதங்களாக பெரம்பலூரில் தங்கி பிச்சை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ந. சுப்பையா (60). இவர், கடந்த சில மாதங்களாக பெரம்பலூரில் தங்கி பிச்சை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
  இந்நிலையில், உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த சுப்பையா திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் புறநகர் பகுதியான மூன்று சாலை சந்திப்புப் பகுதியில் இறந்து கிடந்தது புதன்கிழமை அதிகாலை தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று முதியவரின் உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com