நீடித்த மானாவாரி இயக்கத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நீடித்த மானாவாரி இயக்க திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட வேளாண் துறை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட

பெரம்பலூர் மாவட்டத்தில் நீடித்த மானாவாரி இயக்க திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் துறை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
2017- 18 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 6 மானாவாரி தொகுப்புகளில், 7 மானாவாரி விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு 15,000 ஏக்கர் மானாவாரி நிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உழவு மானியமாக தொகுப்பில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ. 500, பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. உழவு மேற்கொண்ட விவசாயிகள் பட்டியல் மானியம் பெற பரிந்துரைக்க வேண்டும். நுழைவுப் பணிக்காக ரூ. 5 லட்சம் தொகுப்பிற்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் கிராமத்துக்கு தேவையான மழைநீர் சேகரிப்பு அமைப்புகளான தடுப்பணை கட்டுதல், கசிவு நீர் குட்டைகள் அமைத்தல் பணிகளை பரிந்துரை செய்யலாம்.
மானாவாரி சாகுபடிக்காக 50 சதவீத மானிய விலையில் விதைகள், உயிர் உரங்கள், நுண்சத்து உரங்கள் வழங்கப்படுகிறது. வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் இந்த மானியத்தை நேரடியாகவும், வேளாண்மை விரிவாக்க மையத்தில் இடுபொருள்கள் இல்லாதபட்சத்தில் தனியார், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பெற்று அதற்கான பட்டியலை தொகுப்பு மேம்பாட்டுக் குழுவிடம் பரிந்துரை செய்து பின்னேற்பு மானியமாக பெறலாம்.
உயிர் உரங்கள் விதைநேர்த்தி செய்து விதைப்பு செய்தால், பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகமாக இருப்பதோடு, வறட்சியையும் தாங்கி வளரும். இதை அனைத்து விவசாயிகளும் கடைப்பிடிக்க பரிந்துரைக்க வேண்டும். மழைநீர் சேகரிப்புக்காக மானாவாரி தொகுப்பு ஒன்றுக்கு ரூ. 7.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்தி தொகுப்பிற்கு தேவையான கசிவுநீர் குட்டைகள், தடுப்பணைகள் அமைத்துக் கொள்ளலாம். விளைபொருள்களை மதிப்புகூட்டி விற்பனை செய்ய தேவையான சிறுதானியங்கள் பதனிடும் இயந்திரம், பருப்பு உடைக்கும் இயந்திரம், தரம் பிரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழியும் இயந்திரம், சிப்பமிடும் இயந்திரங்கள் வாங்க தொகுப்பிற்கான கூட்டுறவு சங்கத்திற்கு ரூ. 4 லட்சமும், விவசாய குழுக்களுக்கு ரூ. 6 லட்சமும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தொகுப்புக்கு தேவையான மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை விவாதித்து வாங்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கால்நடை பராமரிப்பு துறை மூலம், கால்நடை பராமரிப்புக்குத் தேவையான தாது உப்புகள், இனப்பெருக்க குறைபாடு நிவர்த்தி, மடிவீக்க நோய் சிகிச்சை உள்ளிட்டவை ஒவ்வொரு தொகுப்பிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொகுப்பிலுள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com