பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மாலை 3 மணிநேரம் பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூர், செட்டிக்குளம், வேப்பந்தட்டை, பாடாலூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் கடந்த ஒருசில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பலத்த இடியுடன் பரவலாக மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில், செட்டிக்குளம் -58, பெரம்பலூர்- 33, பாடாலூர் 57 மிமீ என மொத்தம் 148 மி.மீட்டர் மழை பெய்தது.
இதைத்தொடர்ந்து, இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையால் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டிருந்தது. மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியிலிருந்து இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது.