பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே காவல் நிலைய உதவி ஆய்வாளரால் தாக்கப்பட்ட அரசு மதுக் கடை ஊழியர், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் அருகேயுள்ள வண்ணாரம்பூண்டி கிராமத்தில் உள்ளஅரசு மதுக் கடையில் விற்பனையாளராக பணிபுரியும் மதியழகன், செவ்வாய்க்கிழமை இரவு விற்பனையை முடித்து கடையை சாத்தி விட்டு மது விற்பனை தொகையை கணக்குப் பார்த்து கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு சென்ற வி.களத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசாருதீன், கதவை திறக்கக் கட்டாயப்படுத்தி உள்ளே சென்று மதியழகனை தகாத வார்த்தைகளால் திட்டி, பலமாக தாக்கினாராம். இதையடுத்து மதியழகன் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துமனையில் சிகிச்சை பெறுகிறார். வி .களத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.