பாடாலூரில் அமைக்கப்படவுள்ள ஜவுளிப் பூங்கா திட்டத்தை துரிதப்படுத்த வேண்டுமென இந்திய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் எம்.டி. அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எம்.கே. ரங்காஸ், மாவட்ட பொருளாளர் வி. பரமசிவம், மாவட்ட இளைஞரணி செயலர் எஸ். வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பெரம்பலூர்- அரியலூர்- துறையூர் வழியாக நாமக்கல் வரை ரயில் பாதைக்கான சர்வே பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். முசிறி, துறையூர், பெரம்பலூர், குன்னம், செந்துறை வழியாக காவிரி நீர்ப்பாசன வாய்க்கால் அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலத்தூர் வட்டம், பாடாலூரில் அமையவுள்ள ஜவுளிப்பூங்கா திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறை உள்ளிட்ட கிராமங்களில் சிறப்பு பொருளாதார மண்டம் அமைக்க விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட இடத்தில் உடனடியாக, அத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டாங்குளத்தூரில் நடைபெறும் வேந்தர் பிறந்த நாள் விழாவில் அதிகளவில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றியத் தலைவர்கள் செந்தில்குமார், ரகுபதி, காமராஜ், பி. செல்வக்குமார், நகரத் தலைவர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.