பெரம்பலூரில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஆக. 18) நடைபெற உள்ளது. 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஆக. 18) நடைபெற உள்ளது. 
பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் கூட்டத்தில், எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, எரிவாயு நுகர்வோர் எரிவாயு சம்பந்தமாக குறைகள் இருந்தால் மேற்கண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். மேலும், எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் களைவது தொடர்பான ஆலோசனைகளும் அளிக்கலாம் என  ஆட்சியரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com