அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை

அம்பேத்கரின் 62 -வது நினைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் வியாழக்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினர்

அம்பேத்கரின் 62 -வது நினைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் வியாழக்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், அக் கட்சியின் மாநிலச் செயலர் வழக்குரைஞர் பி. காமராஜ் தலைமையில், மாவட்ட பொதுச்செயலர் வைரச்செல்வன், மாவட்ட பொருளாளர் பிரபாகரன், மாணவரணி பொறுப்பாளர்கள் கார்த்திக், பிரவீன் ஆகியோர் மாலை அணிவித்தனர். 
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மாவட்டச் செயலர் க. செந்தில்குமார் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் சி. தமிழ்மாணிக்கம் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் என். செல்லதுரை தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  
தி.மு.க சார்பில் மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன் தலைமையில், நகரச் செயலர் எம். பிரபாகரன், வழக்குரைஞரணி மாவட்டச் செயலர் செந்தில்நாதன், பொதுக்குழு உறுப்பினர் கி. முகுந்தன், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் டி. தமிழ்ச்செல்வன் தலைமையில் மாலை அணிவித்தனர்.   இதேபோல, லோக் ஜனசக்தி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூர்,: டாக்டர் அம்பேத்கரின் 62 வது நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் வியாழக்கிழமை  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் மு. செல்வநம்பி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏஐடியுசி சார்பில் மாவட்டச் செயலர் தண்டபாணி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணைத் தலைவர் சின்னதுரை தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் மாவட்டத் தலைவர் அய்யாசாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
அதேபோல், ஜயங்கொண்டம், திருமானூர், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com