பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, இந்து முன்னணி அமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அயோத்தியில் ராமருக்கு ஆலயம் அமைக்க, மக்களவையில் சட்டம் இயற்றக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பெரம்பலூர் மாவட்டச் செயலர் நடராஜன் தலைமை வகித்தார்.
ஒன்றியச் செயலர்கள் செந்தில், செல்வக்குமார், துரைக்கண்ணு, துணைத் தலைவர் மணி, நகரச் செயலர் சபரீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி கோட்டச் செயலர் குணா சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ராமர் கோயில் அமைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
பெரம்பலூர் நகரச்செயலர் கஜேந்திரன் வரவேற்றார். வேப்பந்தட்டை ஒன்றியத் தலைவர் கருப்பையா நன்றி கூறினார்.
அரியலூர்: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் இந்து முன்னணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்பின் அரியலூர் கோட்டச் செயலர் ராஜசேகர் தலைமை வகித்தார். திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ் பேசினார். மாவட்டச் செயலர் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் பழனிசாமி, ரமேஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.