காவலர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில், வெள்ளிக்கிழமை தொடங்கிய காவலர்களுக்கான நிறைவாழ்வு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.  

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில், வெள்ளிக்கிழமை தொடங்கிய காவலர்களுக்கான நிறைவாழ்வு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.  
இதில், பெங்களூருவில் பயிற்சிபெற்ற ஆய்வாளர் சுப்புலட்சுமி, உதவி ஆய்வாளர் சத்யா, மனநலன் மருத்துவர் புவனேஸ்வரி ஆகியோர் பெரம்பலூர் மாவட்டத்தில் பயிற்சியில் உள்ள காவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். 
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்ற திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் வி. வரதராஜூ, மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஆலோசனைகள் வழங்கினார்.  
பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், துணை கண்காணிப்பாளர் ரவீந்தரன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com