பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச. 11) நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளார் மின்வாரிய செயற்பொறியாளர் மேகலா.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில், இயக்குதலும், பராமரித்தலும் செயற்பொறியாளர்கள் முன்னிலையில், பெரம்பலூர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (தமிழ்நாடு மின்சார வாரியம்) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. கூட்டத்தில், பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம்.