பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனையில் முற்போக்கு வாசகர் வட்ட கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மக்களுக்கான மருத்துவர் கழக மாநில செயலர் சி. கருணாகரன் தலைமை வகித்தார். கவிஞர் இரா. எட்வின் சிறப்புரையாற்றினார். இட ஒதுக்கீடும்- சமகால அரசியலும் என்னும் தலைப்பில் பேராசிரியர் குமாரவேல், பேசப்படாத அரசியல் ஆளுமை குறித்து பேராசிரியர் ராஜேந்திரபிரசாத், பெளத்த மதம் எனும் தலைப்பில் மருத்துவர் அறிவழகன், நித்யா ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை, பகுஜன் சமாஜ் கட்சி மாநில் செயலர் வழக்குரைஞர் ப. காமராசு, மருத்துவர் ஜெயலட்சுமி, மாதர் சங்க மாவட்டச் செயலர் கலையரசி, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் இரா.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.