கஜா புயலுக்கு ரூ.3090 நிவாரணம் வழங்கிய 5 வயது சிறுமி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கஜா புயலுக்கு நிவாரண உதவித்தொகையை பல்வேறு அமைப்பினர் வழங்கினர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கஜா புயலுக்கு நிவாரண உதவித்தொகையை பல்வேறு அமைப்பினர் வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்டம்,  பரவாய் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மகள் காருண்யா (5), சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த ரூ.3,090 , பெரம்பலூர் நான்குச்சாலை சந்திப்பைச் சேர்ந்த செல்வகுமார் மகள்கள் சிற்பகலா (5), அன்பகலா (10) ஆகிய இருவரும் பொதுமக்களிடம் வசூலித்த ரூ.2,101 ஆகிய தொகையை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவிடம் திங்கள்கிழமை வழங்கினர்.
 தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சார்பில் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமியிடம்  வழங்கப்பட்டது.                                                   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com