நல்லறிக்கை பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், நல்லறிக்கை நடுநிலைப் பள்ளியில் பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், நல்லறிக்கை நடுநிலைப் பள்ளியில் பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை த. கலைச்செல்வி தலைமை வகித்தார். கடல்தாய் அறக்கட்டளை நிறுவனர் ராஜீவ்காந்தி முன்னிலை வகித்தார்.கரம் கொடு மனிதா அறக்கட்டளை நிறுவனர் பிரபாத் கலாம் நிகழ்வில் பங்கேற்று பாரதியாரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். 
தொடர்ந்து, பாரதியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு மாற்றுடைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  இதில், சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கரம் கொடு மனிதா அறக்கட்டளை மற்றும் கடல் தாய் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அறக்கட்டளை நிர்வாகி ஜெயசீலன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com