காய்கறி மூட்டைகளை திருடிய இளைஞர் கைது

பெரம்பலூர் காய்கறி தினசரி சந்தையில் திங்கள்கிழமை இரவு காய்கறி மூட்டைகளை திருடிய இளைஞரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர். 

பெரம்பலூர் காய்கறி தினசரி சந்தையில் திங்கள்கிழமை இரவு காய்கறி மூட்டைகளை திருடிய இளைஞரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர். 
பெரம்பலூர் ஜமாலியா நகரைச் சேர்ந்தவர் யுவராஜா (26). இவர், பெரம்பலூர் தினசரி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு யுவராஜா கடையிலிருந்த காய்கறி மூட்டைகளை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை பிடித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  விசாரணையில் அவர் பெரம்பலூர் அருகேயுள்ள அருமடல் கிராமத்தைச் சேர்ந்த செங்கமலை (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிந்த போலீஸார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com