பிப். 23- இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் பிப். 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

பெரம்பலூர் ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் பிப். 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் பிப். 23 ஆம் தேதி காலை 10 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. 
இக்கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.
எனவே, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரமுகர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com