பெரம்பலூர் அருகே தீ விபத்து

பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமானது.

பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமானது.
பெரம்பலூர் அருகேயுள்ள நொச்சியம் கிராமம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மருதமுத்து (56). இவரது வீட்டில் திங்கள்கிழமை நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த முருதமுத்து உள்பட வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியே ஓடினர். தகவலறிந்து  சென்ற பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் வீட்டிலிருந்த டி.வி, பிரிட்ஜ், மிக்ஸி, கிடைண்டர், கட்டில், மெத்தை, பீரோ உள்பட ரூ. 1 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசமானதாம். தீ விபத்துக்கான காரணம் குறித்து, பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com