பெரம்பலூர் அருகே, செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுவாசல் பிரிவு சாலை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒன்றரை வயது புள்ளி மான் ஒன்று சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினர் மானை மீட்டு கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் பரிசோதனை மேற்கொண்டு, சித்தளி வனப்பகுதியில் புதைத்தனர்.